"மாணவர்கள் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும்"

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சியும், அறம் அறக்கட்டளையும் இணைந்து மாவட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏரோ, ஆஸ்ட்ரோ கிளப்பினை உருவாக்கியுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, 6 அங்குலம் நீளமுடைய டோப்சோனியன் தொலைநோக்கியை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும், எனது பள்ளி பருவத்தில் குறைந்த செலவிலான கோளரங்கம் அமைப்பதில் முதல் பரிசைப் பெற்றேன். அதுபோல, அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். என்றார்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரி உமா, மாநகராட்சி பள்ளியின் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...